search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் எம்எல்ஏ சாமி"

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு டி.டி.வி. தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Rsamy #RIP
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி. புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய் பாதிப்பு அதிகமாகவே சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் மேலூரில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மனைவி, மகளுடன் நேரில் சென்று சாமி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதைத்தொடர்ந்து மேலூர் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிர முகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக வந்து சாமி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


    இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் மேலூர் மில்கேட் அருகே உள்ள கூலூத்துப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    மறைந்த சாமி மேலூர் தொகுதியில் 2001, 2006, 2011 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். ஜெயலலிதா மறைவுக்கு பின் தினகரன் அணியில் இணைந்து அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். #Rsamy #RIP
    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமியின் உடல்நிலை இன்று காலை மோசமானது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த வாரம் பாதிப்பு அதிகமாகவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 4 நாட்களாக இயல்பு நிலையில் இருந்த சாமியின் உடல்நிலை இன்று காலை மோசமானது.

    உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் இன்று மதியம் வரை அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வின் தீவிர தொண்டரான மேலூர் சாமி, மேலூர் நகராட்சியில் கவுன்சிலராக இருந்து பின்னர் அ.தி.மு.க. நகரச் செயலாளராக பணியாற்றியவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், மேலூர் தொகுதியில் 3 முறை அடுத்தடுத்து போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயலலிதா மறைவிற்கு பின் தற்போது சாமி தினகரன் அணியில் அமைப்பு செயலாளராக உள்ளார். #Tamilnews
    ×